
பினாங்கு ஜார்ஜ் டவுன் ஜாலான் கிரியான் என்ற இடத்தில் இரண்டு மாடி கடை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பேரு குறைந்த பெண்மணி ஒருவர் பரிதாபமாக இறந்தார். இந்தச் சம்பவத்தில் 44 வயதான அந்தப் பெண்மணிக்கு உடல் முழுவதும் தீப்புண் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை தீயணைப்பு படை இலாகா புலன் விசாரணை செய்து வருகிறது.



