
சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 998 இடங்களில் குடிநீர் வினியோகத் தடை ஏற்படும் என்று ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது. போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்ளும்படி கோலாலம்பூர், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், உலு சிலாங்கூர், கோல லங்காட் மற்றும் கோல சிலாங்கூர் வட்டாரத்தில் உள்ள பொதுமக்களை ஆயர் சிலாங்கூர் கேட்டுக் கொண்டுள்ளது. சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் மூன்று நாட்களுக்கு கிள்ளான் பள்ளத்தாக்கில் நீர் விநியோக தடை ஏற்படுகிறது.
