
பிரதமர் ஆக முடியாதா என்பது பற்றி தாம் கவலைப்படவில்லை என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். ஒருநாள் பிரதமராக வருவதா அல்லது தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதா என்பது பற்றி கவலைப்படவில்லை என்றார் அவர். ஏபிசி வானொலிக்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது கண்டிப்பாக ஒருநாள் நான் பிரதமராக வருவேன் என்றார் அவர். வெளிநாட்டில் சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் முக்கிய நபர்களைப் பற்றி பண்டோரோ பேப்பர்ஸ் ஆவணங்கள் கசிந்துள்ளன. இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் தொடர்பில் நான் பிரதமராக வருவதற்கு பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். நான் என் கடமையை செய்கிறேன். தொடர்ந்து எதிர்கட்சித் தலைவராக இருப்பது என்றால் அதை ஏற்றுக் கொள்வேன். ஒருநாள் நான் பிரதமராக பதிவேற்றால் இறைவனுக்கு நன்றி கூறிக் கொள்வேன் என்றார் அவர்



