
மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டச் சம்பவத்தை விசாரணை செய்ய உதவுவதற்கு அம்மையத்தின் பராமரிப்பாளருக்கானத் தடுப்புக் காவல் வரும் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர், ஏ.சி.பி. முகமட் பாரோக் எஷாக் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டச் சோதனை நடவடிக்கையில் இவரது சமூகப் பயண அட்டை காலாவதியாகி விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இவர் 1959/63 குடிநுழைவுச் சட்டம், 55பி பிரிவின் கீழ் வரும் 21ஆம் தேதி தடுப்பில் வைக்கப்படுவார் என்றார்.
