
நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வரும் வேளையில் இன்று சரவாக் மாநில ஆளுநரின் 85 பிறந்த நாளில் தேசிய டைவிங் நீச்சல் தாரகை 28 வயதான பாண்டேலேலாவுக்கு பிஎஸ்பிஎஸ் எனப்படும் பங்கிலிமா செத்தியா பிந்தாங் சரவாக் எனும் உயரிய டத்தோ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.பல அனைத்துலக நீச்சல் போட்டிகளில் கலந்து நாட்டிற்கு பதக்கங்களையும் புகழையும் இவர் தேடித் தந்துள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம்,2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் இவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
