
திரைப்படங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டப் பாடல்களை எழுதி புகழ்பெற்று விளங்கிய கவிஞர் ஒருவரான பிறைசூடன் தமது 62 ஆவது வயதில் காலமானார். 400 திரைப்படங்கள்,1,400 பாடல்கள்,5000 பக்திப் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். இதயமே…இதயமே…, ஆட்டமா தேரோட்டமா, மீனம்மா…மீனம்மா…, நடந்தால் இரண்டடி ஆகியவை இவரின் பொன்னான கரங்களால் உருவான பாடல்களாகும். அன்னாரின் பிரிவு தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
