
நோய்த்தொற்று குறைந்தது பாதுகாப்பு நிலை அடையும் வரை மலாக்காவில் தேர்தல் நடத்துவதைத் தவிர்த்து அங்கு அவசரகால சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பெர்ஜூவாங் கட்சி தலைவர், டத்தோஸ்ரீ முக்ரிஸ் துன் மகாதீர் கேட்டுக் கொண்டுள்ளார். அதுவரை மலாக்கா மாநில அரசை தற்காலிகமாக அதன் தலைமை செயலாளர் நிர்வகிக்கலாம். சபா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலின்போது நோய்த்தொற்று அதிகரித்தது. ஆகவே சபா மாநிலத் தேர்தலை முன் உதாரணமாகக் கொண்டு மலாக்கா மாநிலத் தேர்தல் நடத்துவதை ஒத்தி வைக்கலாம். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மக்களை பணயம் வைப்பது சரியல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.
