
நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கிய உபர் கிண்ண பூப்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மலேசியா 1 – 4 எனும் புள்ளிக் கணக்கில் டென்மார்க்கிடம் தோல்வியை தழுவியது. நாட்டின் பெண்கள் முதல் நிலை விளையாட்டாளரான எஸ்.கிஷோனா 11-21,7 -21 என்ற புள்ளியில் டென்மார்க்கின் மியா பிலிக்பெல்ட் என்பவரிடம் தோல்வியடைந்தார். பெண்கள் இரட்டையர் பிரிவுக்கான ஆட்டத்தில் லீ மெங் இயன் – எம்.தீனா இணை 21 -19,10 -21,21 -13 என்ற புள்ளிக்கணக்கில் தோற்றனர். இன்று மாலை சீனாவையும்,நாளை கனடாவையும் மலேசியா சந்திக்கிறது.



