
நாட்டில் உள்ள உலகப் பொருள் மறுசுழற்சி கடைகளில் பணிபுரியும் அந்நிய தொழிலாளர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசியை போட்டிருப்பதை அதன் உரிமையாளர்கள் உறுதிப்படுத்துவது நல்லது என்று மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலகப் பொருள் மறுசுழற்சி சங்கத்தலைவர் டத்தோஸ்ரீ பி. கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டார். நாட்டில் தடுப்பூசி போடும் பணி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆகையால் தங்களிடம் பணிபுரியும் அன்னியத் தொழிலாளர்கள் அனைவரும் இரண்டு தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் என்பதை அதன் முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும். நம்மிடம் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்பதை மிம்தா உறுப்பினர்கள் உறுதிபடுத்தும் பாடி அவர் கேட்டுக்கொண்டார்.
