
மலாக்கா மாநில முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் மிக விரைவில் பக்கத்தான் ஹரப்பானில் இணைகிறார். அம்னோவில் இருந்து இருக்கும் இவர் சரியான நேரத்தில் தமது முடிவை அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
