
நாட்டில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 90 விழுக்காட்டை எட்டியிருப்பதால் நாளை முதல் மக்கள் மாநிலம் கடந்து பயணிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று அறிவித்தார். இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை. மாநிலம் கடப்பதற்கு போலீஸ் அனுமதியைப் பெற வேண்டியதில்லை. மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை சென்று பார்ப்பதோடு , சுற்றுலா நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும் என்று அவர் தெரிவித்தார். மாநில எல்லைகள் திறக்கப்படுவதால் இனி சாலை தடுப்புகள் ஏற்படுத்தப்படாது . எனினும், அவ்வப்போது திடீர் சாலை சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்
