
மக்கள் மாநிலம் கடக்க அனுமதி வழங்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சாலை தடுப்புகள் நேற்றிரவு முதல் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து Sop விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
