
ஒன்றரை லட்சம் தடுப்பூசிகளை உள்ளடக்கிய சிலாங்கூர் அரசின் இளையோருக்கான செல்வேக்ஸ் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மந்திரி புசார் டதோஸ்ரீ அமிருடின் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இத்திட்டத்திற்கான செயலாக்க வழிமுறைகள் தற்போது உறுதி செய்யப்பட்டு வருவதோடு விரைவில் அதன் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களை இத்திட்டம் இலக்காக கொள்ளும். , சிலாங்கூர் சமய இலாகாவினால் நடத்தப்படும் சமயப் பள்ளிகள், சீன மற்றும் தமிழ் பள்ளிகளும் இத்திட்டம் உள்ளடக்கியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
