
இன்று முதல் மாநிலங்களுக்கு இடையிலான பயணத்தை மேற்கொள்ளலாம் என அரசாங்கம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 9 .30 மணி நிலவரப்படி பினாங்கு பாலத்தில் வாகனங்கள் அதிகரிப்பால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. பெரு நிலத்திலிருந்து தீவுப் பகுதிக்கு செல்லும் வாகனங்களால் பினாங்கு பாலத்தின் டோல் சாவடியை நெருங்குவதற்கு முன் நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. இன்று முதல் மாநிலங்களுக்கிடையிலான பயணத்தை தொடங்க அனுமதி வழங்கப்படுவதாக பிரதமர் நேற்று அறிவித்திருந்தார்.
