
சிறுவயது முதல் தனது விளையாட்டுத் துறைகளில் தம்மை ஈடுபடுத்தி வந்த காஜாங்கை சேர்ந்த குணாளன் விஸ்வநாதன் ஸ்கிப்பிங் பிரிவில் சாதனை படைத்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு 24 மணி நேரம் ஸ்கிப்பிங் செய்து சாதனை படைத்த அவர், இப்போது ஸ்கிப்பிங்கில் 30 விநாடிகளில் 68 முறை குதித்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் மூன்றாவது முறையாக இவர் இடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவரது மனைவி புனிதா தீபாவளிக்கான ஆயிரம் வாழ்த்து அட்டைகளை சொந்தமாக தயாரித்து சாதனை படைத்துள்ளார். தீபாவளி பண்டிகை காலத்தில் வாழ்த்து கார்டுகளை தபால் வழி அனுப்பி வந்த காலம் தற்போது இல்லை என்றாலும் அதனை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் வாழ்த்துக கார்டுகளை தயாரித்து அஞ்சல் வழி உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அனுப்பி வைத்துள்ளார்.
