
சமூக ஊடக பயன்பாட்டிற்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 16 வயதை நிர்ணயிக்க வேண்டும் என்ற கருத்திற்கு, மலேசியாவில் 77 சதவீத பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மலேசியா உட்பட 15 நாடுகளில் வர்கி அறக்கட்டளை (Varkey Foundation) நடத்திய ‘Family First’ உலகளாவிய ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் படி,
📊 குழந்தைகளை டிஜிட்டல் தளங்களில் பாதுகாக்கும் முயற்சிகளை ஆதரிக்கும் நாடுகளில் மலேசியா முதலிடத்தில் உள்ளது.
📊 இந்தியா – 75%
📊 அர்ஜெண்டினா – 55%
📊 ஜப்பான் – 38%
என பெற்றோர் ஆதரவு பதிவாகியுள்ளது.
இந்த ஆய்வு, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் இடம்பெற்ற நாடுகள்:
அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், கென்யா, மலேசியா, நைஜீரியா, ஸ்வீடன், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
மொத்தமாக,
👨👩👧👦 6,002 பெற்றோர்கள்
👧🧒 9 முதல் 18 வயதுக்குட்பட்ட 6,011 குழந்தைகள்
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர்.
இந்த முடிவுகள், குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன.
