
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும்படி மக்களை அழைப்பதில் அரசியல் கட்சிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கும் என்று இல்ஹாம் செண்டரின் நிர்வாக இயக்குநர், ஹிஷாமுடின் பாக்கார் தெரிவித்தார். இது உண்மையில் கோவிட் தொற்றின் நெருக்கடியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒருசில நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளால் வாக்களிக்கும் மனநிலையை வாக்காளர்கள் இழந்ததால் ஏற்பட்டதாகும் என்றார்.. மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்து விட்டதால் அங்கு புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
