
சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளால் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல இடங்களில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் நாளை பூர்த்தி அடையும் வேலையில் கட்டங்கட்டமாக நீர் வினியோகம் சீரடையும் என்று ஆயர் சிலாங்கூர் அறிவித்துள்ளது இருப்பினும் வரும் சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு மேல் எல்லா இடங்களுக்கும் முழுமையான நீர் வினியோகம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
