
டி.எஸ்.பி அந்தஸ்து கொண்ட உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக பெண்மணி ஒருவர் புகார் செய்துள்ளதை சிலாங்கூர் மாநில போலீசார் உறுதிப்படுத்தினர். போலீஸ் அதிகாரிக்கு எதிராக புகார் அளித்தவர் 36 வயது பெண்மணி என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ அர்ஜூனைடி கூறினார். அவருக்கு கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட போது அந்த அதிகாரியால் தாம் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் ஆளானதாக அப்பெண்மணி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு சந்தேகிக்கப்படும் இரு ஆடவர்கள் விசாரணக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
