
நாட்டில் 80 லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். நோய்த்தொற்று பாதிப்பை கொண்டிருக்கும் 50 லட்சம் பேர், நோய்த்தொற்ற எதிர்ப்பு சக்தியை குறைவாக கொண்டிருக்கும் 1,500 பேர், ஆறு லட்சம் முன்கள பணியாளர்கள் மற்றும் 30 லட்சம் மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். இன்று முதல் சரவா மாநிலத்தில் மூன்றாவது தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாகி உள்ளதாக அவர் சொன்னார்.
