
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் தேர்வு செய்யப்படும் முறை மலாக்கா மாநில பராமரிப்பு அரசாங்கத்திற்கு டத்தோஸ்ரீ சுலைமான் தலைமை ஏற்பார் என்று மாநில அரசாங்க செயலாளர் அறிவித்திருப்பதை பக்கத்தான் ஹரப்பான் புறக்கணித்துள்ளது. டத்தோஸ்ரீ சுலைமான் தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்துவிட்டது. பராமரிப்பு அரசாங்கத்துக்கு இவர் தலைமை ஏற்பதை பக்கத்தான் ஹரப்பான் ஏற்றுக் கொள்ளாது என்று அதன் தலைவர்கள் அறிவித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்துவிட்ட இவரை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பக்கத்தான் ஹரப்பான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
