
நாட்டில் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை வெளியிட்டு வரும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு போலீஸ் புகார்களைச் செய்துள்ளது. இந்த புகாரின் வழி சம்பந்தப்பட்டத் தரப்பினரை விசாரிப்பது மற்றும் குற்றஞ்சாட்டுவது போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
