
போக்குவரத்தை கண்காணிக்கும் பணியில் கோலாலம்பூரில் 5,000 ரகசிய கேமராக்கள் பொருத்தப்படும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ சஹிடான் காசிம் தெரிவித்தார். போக்குவரத்து மற்றும் குற்றச்செயல்களை கண்காணிக்க ஏற்கனவே 3000 ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் குற்றச்செயல்களை போலீசார் கண்காணிக்க கூடுதலாக மேலும் 2,000 ரகசிய கேமராக்கள் பொருத்தப்படும் என்றார் அவர்.



