
இஸ்ரேல் ராணுவம் நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் பரிதவித்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலை உலகம் கண்டித்து வரும் வேலையில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு பலரும் நிதி திரட்டி வருகிறார்கள்.
கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த டத்தோஸ்ரீ அன்வர் இப்ரஹிம் 24 மணி நேரத்தில் 5 லட்சம் வெள்ளியை திரட்டினார்.
கெஅடிலான் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் மற்றவர்களும் இதற்கு நிதியுதவி செய்துள்ளனர். பாலஸ்தீன மக்களை காப்பாற்ற நாம் ஒன்று திரள்வோம் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் கோரிக்கை விடுத்துள்ளார்.
