
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தாமான் அசோகா மந்தின் என்ற குடியிருப்புப் பகுதியில் வீட்டின் கூரைகள் பறந்தன.
பலத்த புயல் காற்றுடன் பெய்த மழையால் பல வீடுகளில் கூரைகள் பறந்தன. சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கு விரைந்த நீலாய் சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான அருள்குமார் கூரைகள் பறந்த வீடுகளை பழுது பார்த்து கொடுத்தார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சிறந்த முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்குமார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உடனுக்குடன் கேட்டறிந்து அதற்கு தீர்வு காண்பதில் பாடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



