
இம்மாதம் இறுதியில் எஸ்டோனியா நாட்டிலும் அடுத்த மாதம் ரஷ்யா அருகிலுள்ள லட்வியா நாட்டிலும் நடைபெறும் இரண்டு அனைத்துலகப் பனி சறுக்கு விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல மிர்சாவின் இளம் வீராங்கனை ஸ்ரீ அபிராமி சந்திரன் இலக்கு போட்டிருக்கிறார். வரும் 2024 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் இலக்கில் தற்போது 20 மாதங்களாக லட்வியாவில் தங்கி அபிராமி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எஸ்டோனியா மற்றும் லட்வியாவில் நடைபெறும் அனைத்துலக பணி சறுக்கும் போட்டியில் பல நாடுகள் பங்கேற்றாலும் ஸ்ரீ அபிராமி தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



