
கோவிட் 19 நோய்த்தொற்று தாக்கத்தின் போது முன் கள் பணியாளர்கள் ஆற்றிய சேவை அளப்பரியது என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். வரும் காலங்களில் முன்கள பணியாளர்கள் சேவை வரலாற்றில் நிலைத்திருக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அப்படிப்பட்டவர்களை கெளரவிக்க என்னை அழைத்தற்கு நான் எஸ்.பி. கேர் கிளினிக்கின் இயக்குனர் டாக்டர் சத்ய பிரகாஷுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அதிலும், மருத்துவ ரீதியில் மக்களுக்குக் கைகொடுத்த எஸ்.பி.கேர் மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் சத்ய பிரகாஷ் மிகவும் பாராட்டுக்குரியவர் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். இந்த மனிதநேய பண்பு மலேசியர்களாக நம்மை உயர்த்தும். மருத்துவர், தாதியர், மருத்துவ உதவியாளர்கள் என எஸ்.பி.கேர் கிளினிக்கைச் சேர்ந்த சுமார் 50 பேரை டத்தோ ஸ்ரீ அன்வார் கெளரவித்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.



