
குற்றப்பதிவுகளுக்கு 70 விழுக்காடு வரையிலான அபராதக் கழிவை ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்க முன் வந்துள்ளது. இக்கட்டணக் கழிவுச் சலுகை இங்குள்ள பிளாசா ஷா ஆலமில் வரும் சனிக்கிழமை வழங்கப்படும். அன்றைய தினம் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொதுமக்கள் தங்கள் அபராதத் தொகையை செலுத்தலாம் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் தொடர்புப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
