
வெளிநாட்டில் சொத்துக்களை குவித்துள்ள உலகத் தலைவர்கள் பட்டியலை அண்மையில் பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மலேசியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீர்மானத்தை சபாநாயகர் டத்தோ அஸாஹர் நிராகரித்து விட்டார். இந்த பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமிடம் வாக்குமூலம் பதிவு செய்யும்படி தனது அதிகாரிகளை கேட்டுக் கொண்டிருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டத்தோ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
