
வரும் பொதுத் தேர்தலில் சைட் சாடிக் தலைமையிலான மூடா கட்சியுடன் ஒத்துழைக்க சபா வாரிசான் கட்சி முடிவு செய்திருப்பதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால் தெரிவித்தார். இது தொடர்பில் மூடா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் கூறினார். மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் தலைமையிலான மூடா கட்சிக்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மூடா கட்சியின் பதிவை அங்கீகரிக்கக் கோரி அக்கட்சி வழக்கு தொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



