
மலாக்கா மாநில சட்டமன்றம் கவிழ முக்கிய காரணமாக இருந்த டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பக்கத்தான் ஹரப்பானில் இணைவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பண்டான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரபிஸி ரம்லி தெரிவித்தார். இவர்களை இணைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது. அப்படி வாங்கினால் பக்கத்தான் ஹரப்பான் தோற்றம் பாதிக்கும். ஆகவே இவர்களை இணைத்து கொள்வதை பக்கத்தான் ஹரப்பான் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனிடையே சர்ச்சைக்குரிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கெஅடிலான் கட்சியில் இணைவதை கெடா கெஅடிலான் இளைஞர் பிரிவு கடுமையாக எதிர்ப்பதாக அதன் மாநில தலைவர் முகமட் பிர்டாவூஸ் தெரிவித்தார்.
