
மலாக்கா, கம்போங் அசாம் கும்பாங்கிலுள்ள ஜாலான் ஜாசின்-மலாக்காவில் நேற்று மாலையில் ஏற்பட்டத் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட இருவர் தங்களின் காரீன் மீது ஏறி உயிர் தப்பி விட்டனர். 4 மணி நேரம் இடைவிடாது தொடர்ந்து பெய்த மழையில் ஆயர் குரோ, புக்கிட் பெருவாங், பத்து பெரெண்டாம், மெர்லிமாவ், ஜாசின் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் வகையில் புக்கிட் கட்டில் தீயணைப்பு மீட்பு நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு வண்டி அனுப்பி வைக்கப்பட்டதாக மலாக்கா தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்தது.
