
தேசிய மீட்சித் திட்டத்தின் எஸ்.ஒ.பி.யை மீறி தலைநகர், ஜாலான் அம்பாங்கிலுள்ள இன்னிசை விடுதியில் நண்பரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிய 73 பேருக்கு வெ.5,000 அபராதம் விதித்து.4 லட்சத்து 15,000 வெள்ளி வசூலிக்கப்பட்டதாக கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர், சைஃபுல் அன்வார் யூசோப் தெரிவித்தார். கோலாலம்பூர் குண்டர் கும்பல், சூதாட்ட ஒழிப்பு போலீஸ் குழு புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. இதில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 அந்நியப் பெண்கள், நிர்வாகியாக வேலை செய்யும் ஒரு மலேசிய ஆடவரும் கைது செய்யப்பட்டனர் என்றார்.



