
மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ முக்கிய காரணமாக இருந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பக்கத்தான் ஹரப்பானில் சேர விண்ணப்பம் செய்யவில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மலாக்கா மாநில முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பக்கத்தான் ஹரப்பான் கட்சியில் இணைய விண்ணப்பம் செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெறுகிறது. நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பக்கத்தான் ஹரப்பானில் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



