
உணவகங்களில் புகைப் பிடிப்பதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடை மீதான அமலாக்க நட்டிவடிக்கையை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். உணவகங்களில் புகைப் பிடிப்போருக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு நேற்று தாம் உத்தரவிட்டதாக அவர் சொன்னார். உணவகங்களில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மீதான சோதனையை மேற்கொள்ளும் போது புகைப்பிடிப்போருக்கு எதிரான சோதனையையும் நடத்தும்படி நான் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளேன் என்றார் அவர்.
