
மலாக்கா மா வாநிலத் தேர்தலுக்கான எஸ்.ஒ.பி. குறித்து அடுத்த வாராதில் முடிவுச் செய்யப்படும் என்று மாநில அரசுச் செயலாளர் காமல் முகமட் தெரிவித்தார். இதுகுறித்தப் பேச்சுவார்த்தை வழிகாட்டிகளுடன் ஆய்வுச் செய்யப்பட்டுத் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. இதில் வானிலை, கல்வி, சுற்றுலாத் துறை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்துக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதால் இந்த எஸ்.ஒ.பி. விதிமுறைகளை அடுத்த வாரத் தொடக்கத்தில் தெரியப்படுத்தக்கூடும். தற்போது கல்வித் துறைச் செயல்படத் தொடங்கி விட்டதால் இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் சுற்றுப்பயணிகள் மற்றும் ஹோட்டல்களுக்கான எஸ்.ஒ.பி. பின்பற்றல் குறித்து மறுஆய்வுச் செய்யப்பட வேண்டும் என்றார்.
