
கிலேபாங் கெச்சில் அம்னோ கிளையின் கூட்டத்திற்கு சுங்கை ஊடாங் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் வருகைப் புரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலாக்கா மாநில அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை இவர் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டனர் இதனால் மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்து விட்டது. வரும் நவம்பர் 20ஆம் தேதி மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அம்னோவில் இருந்து டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் நீக்கப்பட்டு இருப்பதாக அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
