
கோவிட்-19 பெருந்தொற்றின் திடீர் அதிகரிப்பை தவிர்க்கவும் நோய்ப் பரவலை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இன்று தொடங்கி நவம்பர் 27ஆம் தேதி வரை பிரச்சாரங்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். தேர்தல் இயந்திரங்களைத் தொடக்கி வைக்கும் நிகழ்வுகளுக்கும் இந்த தடை பொருந்தும் என்று அவர் தெரிவித்தார். வரும் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா மாநில தேர்தலை முன்னிட்டு இத்தகைய நடவடிக்கைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
