
கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஒருமுறை வழங்கப்படும் உதவித் தொகையான 500 வெள்ளி இன்று முதல் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். இந்த ஆண்டு வருமானத்தை இழந்த 870,000 தொழிலாளர்களுக்கு இந்த உதவி பயனளிக்கும் என்று அவர் கூறினார். ‘மலேசியக் குடும்பம்’ நல்வாழ்வை உறுதி செய்வதற்கான இந்தச் செலவினத்தில் மொத்த உதவி RM 434 மில்லியனை உள்ளடக்கியது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
