
தன்னலம் கருதாமல் மக்களுக்கு சேவையாற்றி கொண்டிருக்கும் பிஆர்டி பிம்பிங்கான் சமூக நல இயக்கம் 100 குடும்பங்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கி உதவி புரிந்துள்ளது. கோவிட் காலகட்டத்தில் நூற்றுக் கணக்கான ஏழை மக்களுக்கு உதவி புரிந்த இந்த இயக்கம் தற்போது தீபாவளியை முன்னிட்டு 100 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. இயக்கத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ் வீரசிங்கம் தலைமையில் 100 குடும்பங்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன Etika Sdn Bhd RD Brother @ Dato Dr Rajaindoren BLUES Brothers Taiping @ Kumaran ஆகியோர் உதவிக்கரம் நீட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பெருநாள் காலங்களில் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவ இந்திய இளைஞர்கள் முன் வரும்படி டாக்டர் சுரேஷ் வீரசிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.

