
புதிய அவசரகாலச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டப் பின்னர் நாடாளுமன்றம் கார்ட்டுனாகி விட்டது என்று பொக்கொ சென்னா நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ மாஃபுஸ் ஒமார் தெரிவித்தார். இதற்கு முக்கியக் காரணம் இந்த அவசரகாலச் சட்டத்தை அரசு மீட்டுக் கொண்டதாக கடந்த ஜூலை மாதத்தில் அப்போதைய பிரதமர் துறையின் நாடாளுமன்ற மற்றும் சட்டப் பிரிவு அமைச்சர், டத்தோஸ்ரீ தாகியூடின் ஹசான் அறிவித்தார். இதனால் புதிய அவசரகாலச் சட்டம் தாக்கல் செய்யப்பட வேண்டியதில்லை, ஆனால் இப்போது நமது நாடாளுமன்றம் கார்ட்டூனாகி விட்டதாக அவர் சொன்னார்.
