
சிலாங்கூர் மாநிலம் முழுவதும் உள்ள செல்கேர் கிளினிக்குகளில் மேற்கொள்ளப்படும் பெரியவர்கள் மற்றும் இளையோருக்கான தடுப்பூசி இயக்கம் மேலும் அதிகமானோர் தடுப்பூசி பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் மூலம் 12 முதல் 17 வயது வரையிலான இளையோர் தடுப்பூசி பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு தடுப்பூசி பெறுவதற்கான தேதி கிடைக்காதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி பெறுவதற்கான தேதியை தவறவிட்டவர்கள் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி கடந்த இரு தினங்களில் சுமார் 20 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக செக்சன் 13 இல் உள்ள செல்கேர் கிளிக்கின் மருத்துவர் கூறினார்.



