
பக்கத்தான் ஹராப்பான் கட்சி மட்டுமே மலாக்கா மாநில தேர்தலில் வெற்றி பெற அஸ்திவாரமாக இருக்கும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்கள் ஆணையைப் பெற்று 14ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அணியின் அரசியல் ஸ்திரத்தன்மை கருத்தில் கொண்டு, மக்கள் மீண்டும் ஹராப்பான் கூட்டணியை தேர்ந்தெடுக்க நம்பிக்கையை மக்களுக்கு வழங்கும் என்றார். “நாங்கள் ஒரே அணியில் போட்டியிடுகிறோம், தற்போதைய அரசாங்கக் கட்சியில் இது நடக்கவில்லை, மக்கள் நிலையான ஆட்சியை விரும்பினால், அது ஹரப்பானால் மட்டுமே வழங்கப்படும் என்பது மக்கள் ஏற்றுக்கொள்ள கூடியது என்று அவர் தெரிவித்தார்
