
MCO எனப்படும் மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் நாட்டில் சுற்றுலாத்துறை மோசமான அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பதாக சுற்றுலா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
70 விழுக்காடு சுற்றுலா முகவர்கள் தங்களது தொழிலை நிறுத்திக் கொண்டுள்ளனர்.
பல சுற்றுலா நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது.
தற்போது 20 விழுக்காடு சுற்றுலா நிறுவனங்கள் மட்டுமே தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. மூன்று முறை அமல்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்டம் உத்தரவால் ஒட்டுமொத்த சுற்றுலாத்துறையும் மிகப்பெரிய இழப்பை எதிர்நோக்கியுள்ளன. சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வங்கி கடனை செலுத்த முடியாமல் பெரும் அவதியை எதிர்நோக்கி இருப்பதாக மலேசியா சுற்றுலாத் துறை சங்கம் என்று தெரிவித்தது.
