
சபா மாநிலத்தில் பியோ போர்ட் என்ற வனப்பகுதியில் ஐந்து அபு சயாப் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக சபா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹஸ்னி இன்று தெரிவித்தார் .
சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து தீவிரவாதிகளில் ஒருவர் அந்த கும்பலின் துணைத்தலைவர் ஆவார்.
இவர் பிலிப்பைன்ஸ் அரசால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி ஆவார் என்று அவர் சொன்னார்.
