
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள முதலாளிகள் தங்களது தொழிலாளர்களுக்கு சொந்தமாக தடுப்பூசி மருந்தை வாங்கலாம் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா தெரிவித்தார்.
தேசிய தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த இந்த முயற்சியை சிலாங்கூர் மாநில அரசாங்கம் மேற்கொண்டு இருக்கிறது.
இதற்காக மாநில அரசாங்கம் 10 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆர்வமுள்ள முதலாளிகள் சிலாங்கூர் அரசாங்கத்தின் SElangkah மூலம் பதிந்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.
