
காவல் கைதி கணபதி மரணம் தொடர்பில் நாட்டில் புகழ்பெற்ற மலேசிய கினி இணையத்தளத்தை சேர்ந்த இரு நிருபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.
இன்று காலை 11 மணிக்கு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு நிருபர் நந்தகுமார் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் அவர் விசாரணையில் கலந்து கொள்ளவில்லை.
போலீசாரால் கைது செய்யப்பட்ட கணபதி அண்மையில் மரணமுற்றார்.
தனது மகன் கடுமையாகத் தாக்கப்பட்டதால் அவர் மரணமடைந்ததாக தாயார் தனலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
