
மக்களுக்குத் தகவலைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஊடகவியலாளர்களும் தினசரி வேலையில்தான் இருக்கின்றனர்.
கோவிட்-19 தாக்கம் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் அண்மையக் காலமாக அதிகரித்து வருகிறது.
எனவே, அரசாங்கத்தின் பார்வை ஊடகவியலாளர்கள் மீதும் இருக்க வேண்டியது அவசியம். அவர்களை முன்களப் பணியாளர்கள் வரிசையில் அங்கீகரித்து, ஊடகவியலாளர்கள் நலன் கருதி சில அறிவிப்புகளையும், சலுகைகளையும் அரசாங்கம் வழங்கவேண்டும்.
இது தொடர்பாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் ஊடகவியலாளர்கள் சங்கத்துடன் ஒரு சிறப்பு சந்திப்பை ஏற்பாடு செய்தால், நாங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை விளக்க அது ஒரு வாய்ப்பாக இருக்கும். தயைகூர்ந்து பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!
