
பாஸ் எப்போதும் அனைவருக்குமான கட்சி சமம் என்று கூறிக்கொள்கிறது. ஆனால், மற்ற மதங்களின் உணர்வுகளில் பாஸ் கட்சி உண்மையில் அக்கறை காட்டுகிறதா? என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் கேள்வி எழுப்பினார். அவர்கள் மற்ற இனங்களை மதிக்கிறார்களா? சூதாட்ட நடவடிக்கைகள் குடும்ப நிறுவனங்களின் வீழ்ச்சியை ஏற்படுத்துகின்றன என்ற நம்பிக்கையில் பாஸ் உறுதியாக இருந்தால், அவர்கள் கெந்திங் மலையில் உள்ள சூதாட்ட விடுதிகளையும், நாட்டில் செயல்படும் மதுபான நிறுவனங்களையும் மூட வேண்டும். மூடுவார்களா என்று அவர் கேள்வி எழுப்பினார். அவர்கள் இப்போது மத்திய அரசு. கேசினோ, மது நிறுவனங்களையும் மூடலாம். கெடா மாநிலத்தை மட்டும் குறிவைப்பது ஏன்?” அவர் கேட்டார்.



