
அடுத்தாண்டுக்கானப் பள்ளித் தவணையில் காலைப் பசியாறைத் திட்டத்தைத் தொடரப் போவதில்லை என்ற அரசின் முடிவு சிறார்களிடையே தொடர்ச்சியான ஊட்டச்சத்துப் பிரச்சனையை ஏற்படுத்தி விடும் பிஎஸ்எம் இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது. இலவசக் காலைப் பசியாறைத் திட்டத்தைத் தொடரப் போவதில்லை என்று கடந்தாண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.. அதற்கு பதிலாக பி40 மாணவர்களுக்கானக் கூடுதல் உணவுத் திட்டம் (ஆர்.எம்.டி.) மற்றும் பள்ளிப் பால் திட்டம் (பி.எஸ்.எஸ்.) ஆகியவற்றை அமைச்சு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



